இளைஞர்களின் மனம் கவர்ந்த நாயகியாக தென்னிந்திய சினிமாவில் வலம் வருகிறார் ருக்மிணி வசந்த். இவர் இன்று தனது 29வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளம் மூலம் அவருக்கு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், நடிகை ருக்மிணி வசந்த் குறித்து பலருக்கும் தெரியாமல் இருக்கும் 7 Facts குறித்துதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கிறோம்.
ருக்மிணியின் தந்தை
ருக்மிணி வசந்தின் தந்தை கர்னல் வசந்த் வேணுகோபால். இவர்தான் கர்நாடகாவின் முதல் அசோக சக்ரா விருதை பெற்றவர். 2007ம் ஆண்டு அவரது துணிச்சலுக்காக, அவருடைய வீர மரணத்திற்கு பின் இந்த விருது வழங்கப்பட்டது.
ருக்மிணியின் தாய்
நடிகை ருக்மிணி வசந்தின் தாயார் சுபாஷினி வசந்த், ஒரு திறமையான பரதநாட்டிய நடன கலைஞர் ஆவார். மறைந்த தனது கணவரின் நினைவை போற்றும் வகையில், போர்களில் வீர மரணமடைந்தவர்களின் மனைவிகள் மற்றும் அவர்களது குடும்பங்களை ஆதரிப்பதற்காக அறக்கட்டளை நடத்தி வருகிறார்.